மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேற்று ராகுல் காந்தி சென்றுள்ளார். அப்போது பிஷ்ணுபூர் பகுதியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் மணிப்பூர் ஆளுநரை சந்தித்த பின் ராகுல்காந்தி பேட்டியளித்தார். அதாவது, மணிப்பூருக்கு தற்போது அமைதி தேவை. இங்கே அமைதி திரும்ப வேண்டும். இதையடுத்து சில நிவாரண முகாம்களுக்கு சென்றபோது அங்கு சில குறைபாடுகள் இருக்கிறது. அவற்றிற்கும் அரசு தீர்வு காண வேண்டும் என அவர் கூறினார்.