டெல்லியின் அசோக் விஹாரில் இரு காவல்துறையினர் ஒருவரை பொது இடத்தில் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி, காவல்துறையின் நடவடிக்கையை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞன் தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது போலீசார் அவரை அணுகியதாக தெரிவிக்கப்படுகிறது. “ஏன் இங்கு இருக்கிறாய்?” என்ற போலீசாரின் கேள்விக்கு, “இது எனது வீடு” என பதிலளித்துள்ளார். மேலும், “இரவில் திரியும் திருடர்களை நோக்கி உங்கள் கவனம் இருக்க வேண்டும்” என்ற அவரது கருத்து, போலீசாரை கோபப்படுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Weldone @DelhiPolice
कुछ लोगों को ये वीडियो ग़लत लग सकती है।
लेकिन रात को लड़कियों के साथ छेड़खानी करने वाले मनचलों का ऐसी ही इलाज ज़रूरी है।
अशोक विहार में पिछले कई दिनों से ये लड़के लड़कियों के साथ छेड़खानी करते थे,अब जब पुलिस पकड़ने गई तो पुलिस के साथ ही बदसलूकी शुरू कर… pic.twitter.com/Ub86hBabfm
— Sagar Kumar “Sudarshan News” (@KumaarSaagar) August 31, 2025
சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ காவல்துறை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி, டெல்லி காவல்துறையின் செயல் முறை குறித்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ, காவல்துறையின் பொறுப்புணர்வும், பொதுமக்கள் மீதான அணுகுமுறையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தலைநகரிலேயே இத்தகைய சம்பவம் நடப்பது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கடும் வருத்தம் மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
