ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி 20 மாத திராவிட மடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலாற்றின் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன். மக்களவைத் தேர்தலுக்கான அச்சாரமாக இந்த வெற்றியை பார்க்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை முடிவு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.