சென்னையில் திமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர்  மு.க.ஸ்டாலின், திமுக அரசு கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது . இந்தியா முழுவதும் பதிராவிடக் கொள்கைகள் ரவி வருகிறது.

இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல் சமூகநீதி, சகோதரத்துவம், சம தர்மம் ஆகிய 3 கருத்தியலுக்குத்தான் உண்டு. நாடு முழுவதும் சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்ம கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய சக்திகள் ஒன்று சேர வேண்டும். சமூகநீதி சக்திகளின் ஒற்றுமை தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஏற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.