ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் திமுகவை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். வாக்காளர்களை திமுகவினர் 120 இடங்களில் அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், திமுக ஜனநாயக படுகொலை செய்து வருவதாகவும் கூறினார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருக்கும் நிலையில், ஈரோட்டில் கடைசி கட்ட பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.