காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் காங்., வேட்பாளர் இளங்கோவன் ஆதரவு அளிக்கவும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக + காங்., கூட்டணியில் ஐக்கியம் ஆகுவது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.