ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “வருகிற 28ஆம் தேதி தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது கட்சி ஆரம்பித்தபோது தாமரைக்கு ஓட்டு கேட்டேன்.

நான் தேர்தலில் போட்டியிடும் போது அனைவரின் காலில் விழுந்து ஓட்டு கேட்பேன். ஆனால் தற்போது நிலைமை மாறி போய்விட்டது. இரண்டு கைகளை கும்பிட்டு வாக்கு சேகரிக்கின்றனர். ஆகவே மக்களை எப்படி ஓட்டு போடுவார்கள். மக்களிடத்தில் தான் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் உள்ளது. இளைஞர்கள் அந்த கடமையை சரியான முறையில் செய்தால் தேர்தல் தலையெழுத்தை மாற்ற இயலும்” என்று அவர் பேசினார்.