பாமக நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறி இருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது ஆகும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் முன்பே 17/07/2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும் அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் முடக்கப்பட்டுவிட்டது. தற்போது துவங்கப்படும் திட்டம் அதுபோல் இன்றி தடையின்றி நீடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கவேண்டும் எனும் கோரிக்கையை மத்திய அரசு மற்றும் சுப்ரீம்கோர்ட்டு நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.