தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிய உணவு வழங்கப்படும் வேளையில் சத்துணவின் தரம் குறித்து அறிக்கை ஒன்றை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தினமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுடைய நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தர மற்றும் அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கள் இணைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு நாள்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பல்வேறு பள்ளிகளில் எஎம்எஸ் அமைப்பு மூலம் தினசரி சத்துணவு அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் முறையாக அனுப்பாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்தி ஏஎம்எஸ் அமைப்பு மூலமாக சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தி  மூலமாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.