கர்நாடக மாநிலத்தில் வருகின்றன பத்தாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையை அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று வெளியேற்றுள்ளார். அதன்படி ஆண்டு 3 சிலிண்டர்கள் இலவச மற்றும் தினமும் அரை லிட்டர் பால் இலவசம் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. வீடு இல்லாத ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.