சமீப காலமாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், குஜராத் மாநிலம், நவ்சாரி பார்த்தபூரில் திங்கள்கிழமை ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தனிஷா காந்தி (17) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வகுப்பறையில் இடைவேளையின் போது திடீரென மயங்கி விழுந்த அவரை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பள்ளியிலேயே மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.