கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் நர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.