பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த 23ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1182 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.