ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் மெக்கர்க் 84 ரன்களும், ஸ்டப்ஸ் 48 ரன்களும், சாய் ஹோப் 41 ரன்களும் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எளிதாக குவித்தது. இதைத்தொடர்ந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்கம் சீராக அமையாத நிலையில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் இசான் கிஷன் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்‌. இதனையடுத்து திலக் வர்மா-ஹர்திக் பாண்டியா ஜோடி விளையாடியது. இதில் பாண்டியா 46 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், அடுத்ததாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் திலக் வர்மா அடித்த பந்து கேட்சாகி போக அடுத்ததாக களம் இறங்கிய ஃப்யூஸ் சாவ்லா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.