கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கு ரோஷன் என்ற 13 வயது மகன் இருந்துள்ளார். விஜயபுராவை சேர்ந்த ஷாகர் நாயக் என்பவர் உடன் பேஸ்புக் மூலமாக ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமாகிய நிலையில் ஸ்ருதியின் நடத்தையில் சாகருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டு, அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுருதி மற்றும் ரோஷனை கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசியுள்ளார். கொலை நடந்து ஒரு வருடம் கழித்து போலீசார் சாகரை தற்போது கைது செய்துள்ளனர்.