கேரள அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கேரள ஆளுநரை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலுவையில் இருந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 3 மசோதாக்களுக்குக் கடந்த மாதம் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். எனினும் 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவரும் அதனை நிலுவையில் வைத்துள்ளார். இதன் காரணமாக இது குறித்து கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.