திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத  கணக்கெடுப்பு, இருப்பு கோப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேற்கண்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? இணையதள பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய காலகட்டத்தில் பட்டா வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.