பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்தி விடும். அதுவே சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள் என பலவற்றில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அடிக்கடி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனை சிலர் வேடிக்கையாக கையில் எடுத்து விளையாடுவதையும் அதன் மீது படுத்து உறங்குவதையும் வீடியோவாக பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் நாக பாம்பு ஒன்று தாகத்துடன் இருக்கும் நிலையில் கடும் வெப்பம் காரணமாக வெளியே வந்து தண்ணீர் தேடியுள்ளது. அதனை அறிந்த நபர் ஒருவர் தன்னுடைய பாட்டிலில் இருந்து நாகப்பாம்புக்கு தண்ணீரை கொடுக்கும் போது பாம்பு மிக வேகமாக தண்ணீரை குடிக்கின்றது. பாம்புக்கு தண்ணீர் கொடுத்த அந்த நபரை பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.