டைரக்டர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு 2018-ஆம் வருடம் பரியேறும் பெருமாள் எனும் திரைப்படம் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர் தான் மாரி செல்வராஜ். இதையடுத்து பேரன்பு, கர்ணன் ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜ் டைரக்டில் நேற்று வெளியாகியுள்ள படம் மாமன்னன்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் தளபதி விஜய்யை சந்தித்தது பற்றி மாரி செல்வராஜ் பேசி உள்ளார். அதாவது, விஜய்யை நேரில் சந்தித்து ஒரு கதை சொன்னேன். கதையை கேட்டதும் விஜய் கமர்ஷியல் விஷயம் இல்லையா?. எனக்கு இப்படியொரு கதையா என விஜய் சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு சென்றுவிட்டாராம். இதை பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.