தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில்  தினமும் உள்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் தி.மலையில் குவிகின்றனர்.

இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு எப்போதும் பக்தர்களுக்கு தரிசன கட்டணம் 50 ரூபாய் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முன்னறிவிப்பு ஏதும் இன்றி தரிசன கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.