அஞ்சாதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் அறியப்பட்ட துணை நடிகர் ஸ்ரீதர் நேற்று இரவு 1.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் அஞ்சாதே படத்தில் மகனின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்படும் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.