பிஜூ ஜனதாதள கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான சுக்னானா குமாரி தேவ் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். சென்னையில் 1937இல் பிறந்த இவர், சென்னை பல்கலை.,யில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். திருமணத்திற்கு பின் ஒடிசா மக்களால் மகாராணி என அழைக்கப்பட்ட இவர், 1961 முதல் 10 முறை எம்எல்ஏவாக தேர்வானவர். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.