இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் திருமண வாழ்க்கை குறித்து ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பவதாரணிக்காக பல இடங்களில் நானும் அவளுடைய அம்மாவும் சேர்ந்து மாப்பிள்ளை தேடினோம். பல வரன்கள் வந்தன. ஆனால் அதில் ஒன்று கூட பவதாரணிக்கு விருப்பமில்லை. அதன் பிறகு மதுரையில் வசிக்கும் சபரி என்பவரோடு திருமணம் நடந்து முடிந்தது.

மகளின் திருமணத்திற்காக இளையராஜா சந்தோசமாக இருந்தார். மேலும் 2005 ஆம் வருடம் பத்திரிகை அதிபர் எஸ் என் ராமச்சந்திரனின் மகன் சபரிராஜனை காதலித்து  திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் திருமணம் ஆகி இவர்கள் இருவருக்கும் குழந்தைகளை இல்லை என்று ஏகப்பட்ட சிகிச்சையும் பவதாரணி எடுத்துக் கொண்டார் எனவும் கூறியுள்ளார்.