சிவில், மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை அண்ணா பல்கலைகழகம் மூடுவதாக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் தமிழில் பயிற்றுவிக்கப்பட்ட வந்தது. இந்த பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் சேர்க்கை குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.