வேலூர் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவினர் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைக்க கொண்டுவரப்பட்ட தேர்வு நீட் தேர்வு. சில தனியார் பயிற்சி மையத்தில் லாபத்திற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.