தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதியின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பரிதி இளம்சுருதி – டாக்டர் நந்தினி என்ற கனிஷ்கா ஆகியோரின் திருமணத்தை சென்னை கொரட்டூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் இருப்பதாக பேசினார். விரைவில் தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும்.

இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு- எப்படி 2021-ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித்தரக்கூடிய ஒருநிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள்   என்றார் முதல்வர்.