கோவையில் நடைபெறும் ஈஷா மகா சிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மகா சிவராத்திரி விழா வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் இலவசமாக கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இலவசமாக பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்கள் தாமிரபரணி என்ற பிரிவை தேர்வு செய்து பெயர்,அலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.