தமிழகத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது புதிய ஏழு மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.