தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வருகின்ற ஜனவரி 18 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு நூறுக்கு பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது. தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 12 தக்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.