தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் கல்வி ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொது தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச் 1, 4, 26 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன. குறிப்பாக தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே ஐந்தாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.