தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அதன்படி, வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி (செவ்வாய்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து கொச்சி, திருவனந்தபுரம் செல்வதற்கான விமானக் கட்டணம் ரூ.14,000ஆக அதிகரித்துள்ளது. மேலும், மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.