தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில், ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இல்லையெனில் அபராதம், தண்டணை என பின்விளைவுகள் மாணவர்ளுக்கு உண்டு. இந்நிலையில் தற்போது, சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தமிழில் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவனின் காதை பிடித்து திருகியுள்ளார். இதனால் காது சவ்வு கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.