தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மார்ச் மாதம் இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகிவிடும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.