தமிழகத்தில் கடந்த வாரங்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் வார விடுமுறையும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைப் போலவே கடந்த வாரமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. இவ்வாறு தொடர் விடுமுறைகள் காரணமாக பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்பினர்.

இந்நிலையில் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர்கள் தினம் என்பதால் தமிழ்நாடு அரசு அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புனித வெள்ளியை முன்னிட்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையை கலைத்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரமும் ஏப்ரல் 29, ஏப்ரல் 30, மே 1 என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.