பொங்கல் பரிசு தொகை ரூ.1000-ஐ வங்கிக் கணக்குகளில் செலுத்துவது பற்றி அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுவாமி மலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் வரப்போகிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.