பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜன.12 முதல் ஜன.14 வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.

மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் விடுமுறைக்கு பின் 17,589 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.