தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் தொடர்ந்து விடுமுறைகள் வருவதால் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் ஒன்பதாம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் மூன்றாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை எவ்வாறு முடிப்பது என்று ஆசிரியர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் அதிகபட்சமாக 2 நாட்கள் மட்டுமே விடுமுறை இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.