சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் மற்றும் மங்களூர் விரைவு ரயில்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எழும்பூரில் இருந்து இரவு 11 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மங்களூரு விரைவு ரயில், திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ராக்போர்ட் பதிவிறைவுறையில் ஆகியவை நவம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.