தமிழக கோவில் திருவிழாக்களில் தனிநபர் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருவிழாக்களில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரி ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், ‘தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவுகளை தக்கார் பின்பற்றி திருவிழா நடத்த வேண்டும்.  என கூறி வழக்கை முடித்துவைத்தது.

மேலும் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோயில் திருவிழாவில் வழிபடுவதையும் அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். அதை பின்பற்றி முறையாக திருவிழா நடப்பதை தக்கார் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.