தமிழகத்தில் அரசு சார்பாக விதவைப் பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை திட்டத்தில் பயன் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் தமிழக அரசின் இந்த திட்டத்தில் பயன்பெற ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட விதவைகள், 20 வயதிற்கு மேல் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு ஆண் மகன்கள் இருக்கக்கூடாது. மேலும் அவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது.

இந்த உதவி தொகை விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்க ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கணவரின் இறப்புச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை இருக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வழங்கும் விதவை உதவித்தொகை திட்டத்தை பெற விருப்பம் உள்ள பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். tnega என்ற இணையதள போர்டலுக்கு சென்றோம் விண்ணப்பிக்கலாம்.

முதலில் tnega என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று citizen login என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் புதிதாக அக்கவுண்ட் ஓபன் செய்து new user? Sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கவுண்ட் ஓபன் செய்யலாம். ஏற்கனவே அக்கவுண்ட் உள்ளவர்கள் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்த லாகின் செய்து கொள்ளலாம். அதன் பிறகு revenue department என்பதை கிளிக் செய்து destitute widow pension scheme என்பதை கிளிக் செய்து புரோசிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர்  Register can என்பதை க்ளிக் செய்யவும். அதில்  Document Type-ல் திரு/ திருமதி என்பதில் சரியானவற்றை கொடுத்து விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும்.

அந்த OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யவேண்டும். இப்போது can நம்பர்/ ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வந்துவிடும். அவற்றை க்ளிக் செய்யவேண்டும்.

அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும். அவற்றை கொடுத்து Confirm OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

பின்னர் Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும். படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும். Aadhar Consent Form-ஐ பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். இந்த படிவத்தினை upload செய்யவும். அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். அவற்றில் service charges என்பதில் ரூ.10 இருக்கும்.

I agree என்ற கட்டத்தில் டிக் செய்த பிறகு make paymentஐ கொடுக்க வேண்டும். பின்னர், ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும்.  பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும். அந்த எண்ணினை கொடுத்து உங்களுடைய status-ஐ உறுதி செய்து கொள்ள முடியும்.