சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி வரை பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழில் பிரிவுகளில் நடைபெற உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் சேர்க்கை பெறலாம்.

பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதம் தோறும் 750 ரூபாய் மற்றும் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் மற்றும் மிதிவண்டி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-22510001, 8248738413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.