தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல் மருத்துவமனைகளில் கட்டாயம் 100% முடக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் மத்திய அரசு தராததால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், மக்களிடம் நோய் எதிர்ப்பாற்றால் உள்ளதால் உருமாறிய கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கூறினார். முன்னதாக தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 120 கடந்து பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.