தமிழகத்தில் அதிமுகவில் கடந்த சில நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இது இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற உள்ள முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டமாகும். இதில் பாஜக உடனான கூட்டணி, 2024 ஆம் ஆண்டு தேர்தல் குறித்த ஆலோசிக்கப்பட உள்ளது.