பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் முகமாக நான் மட்டுமில்லை பலர் உள்ளனர். என்னை பொருத்தவரை திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் கட்சி தரப்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என கனிமொழி MP கூறியுள்ளார்.

மேலும் தங்களை அமைச்சரவையில் எப்போது பார்ப்பது என கேட்கப்பட்டது. அதற்கு, அமைச்சரவையில் ஒரு அங்கமாக வருவது என்பது கட்சி எடுக்கும் முடிவு. கட்சியில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும், யார் எந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யும் என்றார்.