நடிகர் விஜய் தந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய வி.ம.இ நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், ‘நிர்வாகிகளிடம் அவரவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ள விஜய் அறிவுறுத்தினார். மேலும் விஜய மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் இரவுநேர பாடசாலை திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரவு நேர பாட சாலைக்கான இடம் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக தேர்வு செய்து தரப்படம் என்றும் இதற்கான வாடகையும் விஜய் மக்கள் இயக்கத்தால் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரவு நேர பாட சாலைக்கான ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறைந்தபட்ட கல்வி தகுதியாக இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்கம் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.