தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த முகாம்களின் நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது வரையிலும் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 1.75 லட்ச இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் அரசு சார்பில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமை சரியாக பயன்படுத்தி வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.