நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிடும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் அனைத்துவித நலத்திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக சென்றடைய ரேஷன் கடைகள் உதவுகின்றன. இதனால் ரேஷன் கடைகள் குறித்த புதிய அறிவிப்புகளை மக்கள் உடனடியாக அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

அதே சமயம் கூட்டுறவுத்துறை தொடர்பான காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் மக்களை அதிகம் கவனிக்க வைக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் போன் பே, கூகுள் பே, பேடி எம் போன்ற யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அதிகம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மட்டுமே பயன்படுத்தி வருவதால் இந்த அறிவிப்பு மக்களை குஷிப்படுத்தி உள்ளது.