சென்னை புறநகர் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து ஆக மின்சார ரயில்கள் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்து உள்ளதால் அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் பயணிக்கின்றனர். அதே சமயம் தெற்கு ரயில்வே திங்கள் முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமை போன்ற வேலை நாட்களில் மக்களின் கூட்டத்திற்கு ஏற்ப அதிக அளவிலான ரயில்களை இயக்கி வருகின்றது.

பொது விடுமுறை,ஞாயிற்றுக்கிழமை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் குறைவான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற மே 1ஆம் தேதி விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வழிகளில் செல்லும் புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.