தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்றமே இரண்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறும். இதில் வேலை வாய்ப்பு மற்றவர்களுக்கு கல்வி தகுதிகளுக்கு ஏற்ப வேலை வழங்கப்படும். இந்த முகாமின் மூலமாக தனியா துறையில் பணி நியமனம் பெறுபவர்களின் அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.