தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருள்களுக்கு பில் போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில கடைகளில் மக்கள் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டு கள்ள சந்தையில் விற்பதாக புகார் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரேஷனில் கட்டுப்பாடற்ற பொருட்களை வாங்க தேவையில்லை என அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.